Saturday, December 17, 2011

வெற்றியின் சார்புகள்

வறண்ட சிந்தனையில் கவிய மறுத்து
ஒருக்கணித்துக் கிடந்தது என் பேனா.
இழந்த மின்சாரத்தில் ஒரு சாரமுமற்று
கதறாமல் கிடந்தது மின்விசிறி.
எட்டாவது முறையாய் எட்ட முயன்று
சாணேறி முழம் சறுக்கியது
சுவற்றோரச் சிலந்தி.
ரேஷன் கடையில் பொழுதிழந்ததை
புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.
ஏழுமுறை முயன்ற கஜினியின் வரலாறை
எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தான் தம்பி.
ஒதுங்க எவ்வாதரவுகளுமற்று இன்னமும்
வெளியைப் பொசுக்கிக் கொண்டிருந்தான் ஆதவன்.
சுற்றெங்கும் விரவிய நிராசைகள் மீதேறி
வென்று கொண்டது என் பேனா மட்டும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

No comments: