Sunday, October 20, 2013



மழை

வீதியில்

பெய்த மழை
வீட்டிலும்
கொஞ்சம் பெய்யும்
ஓட்டை ஒடிசல்
பாத்திரமென்றாலும்
ஒழுகும் இடத்தில்
வைத்துக் கொண்டிருப்பாள் அம்மா
நான் கப்பலுக்காக
காகிதம் தேடுவேன்
ஜன்னலுக்கு வெளியாய்
தன் பிஞ்சுக் கை நீட்டி
மழையைப் பிடிப்பான் தம்பி
அடுக்களையில் அக்கா
அரிசியையோ பட்டாணியையோ
தேடிக் கொண்டிருப்பாள்
இரவு நேர மழைக்கு
இத்தனை ஆர்ப்பாட்டமென்றால்
பள்ளி நேர மழையில்
கண்ணா இரண்டு லட்டு
தின்னும் ஆசைதான்
இப்பொழுதெல்லாம்
வலுத்துச் சூழ்ந்த
செங்கல் சுவர்களில்
கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே
மழை நீர்
திட்டுக்களைப் பார்க்கும் போது
ஏதோ டீவியில்
பெய்வதைப் போல்
தெரிகிறது.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ 

No comments: