Wednesday, July 28, 2010

அறிவிலி

இருளில் கரையும் ஈசலின் தவிப்பு
தூர ஒளிரும் சிம்னியில் ஆசுவாசம்
பறந்து விரையும் தேடலின் துவக்கம்
அருகில் அடைந்த ஆவல் மிகுதி
அத்துணையும் சேர்ந்த ஆனந்தக் கூத்தாடல்
எல்லாம் கிடைத்த ஏக்கச்செறிவு
ஒன்று மட்டும் எஞ்சியதாய் ஓரம் ஒரு சோகம்
அதையும் நாடிய அளவற்ற ஆவல்
பாய்வதற்கான மெல்லிய பதுங்கல்
மீறிய ஆவேசப் பாய்தல் இலட்சிய இலக்கில்
கரிந்து கரை சேரும் பரிவு மரணம்
அடுத்தவர்களுக்கான எச்சரிக்கையாய்
ஒரு ஓரம் அதன் பிணம்
எல்லாம் கண்டும் சீறிக் கிளம்பும்
இன்னொரு ஈசலாய் என் பயணத் துவக்கம்
உன் திசைகள் நோக்கி.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

No comments: